பக்கம்:தேன்மழை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் தேன்.மழை 50 புத்தகங்கள், முத்தமிடும் மனைவி, சொற்கள் புரியாத மழலைமொழி பேசும் மக்கள் இத்தரைமீ தினில்ஒவ்வோர் மனிதனுக்கும். இருப்பதுவே சிறப்பாகும்: இருக்குமாயின், புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால் பூரிப்பும் மனைவியினால் சுகமும் சேரும். எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி இல்லான் இல்வாழ்க்கை கரும்புக்கு வெறும்பூ அன்றோ? பொங்குகின்ற புகழ்வேண்டி உயிர்வேண்டாது போராடும் iரரொடு களத்தில் நின்று செங்குருதிப் போர்புரிந்து வாகை சூடிச் சிரித்தவனே! இணைமோனை போன்றிருக்கும் மங்கையரை யான்தரநீ ஏற்றுக் கொள்க. வரலாற்றில் வளர்பவனே! இல்ல றத்தைத் தங்குதடை இல்லாது நடத்திச் செல்க தமிழ்மொழிபோல் நீடுழி வாழ்க 67pTಿ. மூலம் : புறநானூறு (201) இவரியார் என்குவை யாயி னிவரே ஊருட னிரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/52&oldid=926867" இலிருந்து மீள்விக்கப்பட்டது