பக்கம்:தேன்மழை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமலைத் தேவன் சந்தனச் சோலை முதுர் தலைமலை கண்ட தேவன் அந்தநாள் கவிஞன். அன்னோன் அந்தகக் கவிஞன். பாட்டுப் பந்தயக் கவிஞன். நீதி பாடிய கவிஞன். சொந்தச் சிந்தனைக் கவிஞன். பாடல் திருடாத கவிஞன் ஆவான்! தாய்மொழிப் பற்று மிக்க தலைமலைத் தேவன் ஒர்நாள் நாய்துயி லறிந்தும் நெய்தல் நகர்துயி லறிந்தும் தொட்டில் சேய்துயி லறிந்தும் அவ்வூர்ச் சித்திரப் பரத்தை வீட்டின் வாய்தனில் கதவை நீக்கி வளமனை உள்ளே சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்மழை.pdf/84&oldid=926899" இலிருந்து மீள்விக்கப்பட்டது