பக்கம்:தேவநேயம் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம் பாவாணர்

பாவாணர்

xi



எத்திசையின் தமிழ்வழக்கும் அவரைப் போலே
     எவர்அறிந்தார்? கருவியிசை நான்கும் வல்லார்!
தித்திக்கும் பன்னூறாம் இசைப்பா டல்கள்
     தீட்டிஇசைத் தமிழ்க்குவளம் கூட்டி நின்றார்!

இருபதாம் நூற்றாண்டுத் தமிழி யக்கம்
     இவர்உழைப்பால் செழித்தது காண்! இந்திப் போர்க்கே
எருவாகப் பலநூல்கள் இயற்றித் தந்தார்;
     இயக்கத்தில் தமைஈடு படுத்திக் கொண்டார்;
வரும்எதிர்ப்பை வரவேற்றார்; வறுமைத் துன்பம்
     வாட்டுகின்ற நிலையினிலும் மானம் காத்தார்!
கரும்பொன் பாவாணர்ஓர் இயக்க மாகக்
     கனிதமிழ்வாழ் காலமெலாம் வாழ்வார், வாழ்வார்.

முனைவர் இரா.இளவரசு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/12&oldid=1479896" இலிருந்து மீள்விக்கப்பட்டது