பக்கம்:தேவநேயம் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அக்கம் பாவாணர் 4. நுண்ணிதாதல். அஃகி யகன்ற அறிவென்னாம் (குறள். 175) அஃகு - அக்கு = முட்போன்ற முனைகளுள்ள மணி, (உருத்திராக்கம்). இராக்கம்), அக்கை யணிந்தவர் மெய்யுரை (திருவானைக். கோச். செங். 4) அக்கு - அக்கம் = பெரிய அக்குமணி. 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு, அப்புக் கொக்கிற கக்கம் திருப்பு. 416) அக்கு என்பதே இயல்பான சொல் வடிவம். முள்ளுண்மை பற்றி அப்பெயர் தோன்றிற்று. முண்மணிகள் காய்க்குமரம் முப்பதுட னெட்டே என்று விருத்தாசலப் புராணம் கூறுதல் காண்க. கண்டம், கண்டி, கண்டிகை என்னும் பெயர்களும் அப்பொருள் பற்றித் தோன்றினவே. கண்டம் (கள்ளி), கண்டகம் (முள், நீர்முள்ளி) கண்டகி (தாழை), கண்டு, கண்டங்கத்தரி (முட்கத்தரி) முதலிய பெயர்களை நோக்குக. அக்கமணி இந்தியாவில் நேபாள நாட்டிற்கே உரிய இயற்கை விளைபொருள். ஆரியர் வருமுன்பு வட இந்திய வாணருட் பெரும்பாலர் சிவமதத் திரவிடரே. சிவநெறிக்குரிய குறி (இலிங்க) வழிபாடு செய்துவந்த பழங்குடி மக்கள் 'சிச்னதேவ' என்று வேத ஆரியராற் பழிக்கப்பட்டனர் (இ.வே.), ஆரிய வருகைக்கு ஆயிர மாண்டுகட்கு முற்பட்ட அரப்பா - மொகெஞ்சோதரோ மக்களும் சிவநெறியரே. அந்நெறி தென்னாட்டிலேயே தோன்றிற்று. தென்ண டுடைய சிவனே போற்றி போற்றித் திருவகவல்) தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (சிவபுராணம்) பாண்டி நாடே பழம்பதி யாகவும் கீர்த்தித் திருவகவல்) என்று மாணிக்கவாசகர் பாடுதல் காண்க. அக்கமணி யணிவு முதலில் மருத்துவ முறையில் தோன்றி, பின்பு சிவநெறியோடு தொடர்புபடுத்தப் பெற்றதாகத் தெரிகின்றது. அக்கம் என்னும் சொல்லை வடமொழியாளர் அக்ஷ என்று திரித்து, அதை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, சிவபெரு மான் முப்புர எரிப்பு முயற்சியில் ஆயிரம் தேவயாண்டு மருண்டு விழித்திருந்ததால், அவர் கண்களினின்று வடிந்த கண்ணீரில் அக்குமணி மரங்கள் தோன்றினவென்று, அக்ஷ என்னும் வட சொல்லின் கண் என்னும் பொருட்கேற்பக் கதையுங் கட்டிவிட் டனர். இக்கதையின் பொய்ம்மையைத் துடிசை கிழாரின் 'உருத்திராக்க விளக்கம்' என்னும் நூலிற் கண்டு தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/154&oldid=1431642" இலிருந்து மீள்விக்கப்பட்டது