பக்கம்:தேவநேயம் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்தியர் பாவாணர் பொல்லாச் சிறகைவிரித் தாடிணற் போலுமே என்று ஒளவையார் பாடுதல் காண்க. பொல்லாங்கு தீது; பொல்லாப்பு தீங்கு, புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது என்று அதிவீரராம பாண்டியரும், உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்குப் பொல்லாப்பு என்று பழமொழியும் கூறுதல் காண்க. பொல்லான் பொல்லாதவன் என்பன தீயவனைக் குறிக்கும் பெயர்கள் (சொல், 106), அகத்தியம் பண்டைக்காலத்தில் தலைக்கழகத் திலக்கணமாக இருந்தது அகத்தியம். அது முத்தமிழ் முழு இலக்கணமாயிருந்ததினால் தமிழுக்கு இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதனால் அகத்தியம் என்ற சொல்லுக்கு இன்றியமையாமைப் பொருள் தோன்றிற்று. ஒருவர் ஒரு கூட்டத்திற்கு இன்றியமையாது வர வேண்டுமாயின் அவரைத் "தாங்கள் அகத்தியமாய் வர வேண் டும்” என்றழைப்பது இன்றும் தென்னாட்டு வழக்கு (சொல், 15), அகத்தியர் அகத்தியர் என்று எத்தனையோ பேருளர், அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர். அகத்தியர் காலம் அகத்தியர் இராமர் காலத்தவராதலின், ஏறத்தாழக் கி.மு. 1200 ஆண்டுகட்கு முற்பட்டவராவர். அகத்தியர் கதைகள் (1)விந்தத்தின் செருக்கடக்கினது ஒரு காலத்தில் பனிமலை (இமயம்) நீர்க்கீழ் இருந்தது. அப்போது விந்திய மலை மிகவுயரமாய்த் தோன்றிற்று. பனிமலை யெழுந்த பின், அதனொடு ஒப்பு நோக்க விந்தம் மிகச் சிறிதாய்த் தோன்றிற்று. இதே, விந்தத்தின் செருக்கடக்கம். இதை அகத்தியர் பெய ரொடு தொடுத்துக் கூறக் காரணம், அவர் தென்னாடு வந்தபின் குமரி நாட்டைக் கடல் கொண்டமையே. அகஸ்தியர் என்னும் பெயருக்கு, விந்தத்தின் அகத்தை (செருக்கை) அடக்கினவர் என்று, வடமொழியிற் பொருள் கூறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/156&oldid=1431645" இலிருந்து மீள்விக்கப்பட்டது