பக்கம்:தேவநேயம் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146) தேவநேயம் அகத்தியர் விளைவிப்பதும், வேட்டைக்காரர் அவ்வப்போது அவற்றைக் கொல்வதும், தாளிகை வாயிலாய் யாவரும் அறிந்தவையே. 'வடபால் முனிவரன் தடவுட் டோன்றி'னதாக இருங்கோ வேளைப்பற்றிப் புறநானூற்றிற் கூறியிருக்கும் செய்தி, கற்பனை யான பழமைக்கூற்றாதலின், ஆராய்ச்சிக்குரியதன்று. இதுகாறும் கூறியவற்றால், அகத்தியர் பாரதக் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவ ரல்லர் என்பதும், இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், முதலிரு கழகமும் இம்மியும் ஆரியச் சார்பில்லா முழுத் தூய்மை பெற்றவை என்பதும், இடைக்கழகக் காலத்தில் ஆரியம் என்னும் பெயரே உலகில் தோன்றவில்லை யென்பதும், அறிந்து கொள்க தமிழ் எண்ணிற்கு மெட்டாக் காலத்துக் குமரிமலை நாட்டில் தோன்றிய உலக முதல் ஒருதனிச் செம்மொழியாதலின், அதன் தொன்மையை உணராத பிற்காலத்தார் அகத்தியரைத் தலைக் கழகத்தினராகவும் தொல்காப்பியரை இடைக்கழகத்தினராகவும் கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப்பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற் றுணர்ச்சி அற்றுவிட்டதுமே, கரணியமாகும். ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்தி லேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழி நூலறி வின்மையும், மிக்க பண்டைக்கால அல்லது இடைக்காலத் தமிழ ரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்! (ஓ.மொ.) அகத்தியர்க்கு முன்னரே தனித்தமிழர் தமிழ் வளர்த்தமை குமரிநாடு எவ்வளவு பழைமையானதோ அவ்வளவு பழைமை யானது தமிழ். தொண்டு, நும் என்னுஞ் சொற்களின் இயல்பு தொல்காப்பியரால் அறியப்படாமையாலும், இக்காலத்தி னின்று பழங்காலம் நோக்கிச் செல்லச் செல்லத் தமிழில் வட சொற்கள் குறைந்து கொண்டே போவதினாலும், அகத்தியத் திலும் தொல்காப்பியத்திலும் ஐந்தாறு சொற்களே வடசொற் களாயிருத்தலானும், அகத்தியர் காலத்திற்கு முன்பே எட்டுணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/163&oldid=1431654" இலிருந்து மீள்விக்கப்பட்டது