பக்கம்:தேவநேயம் 1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

170 தேவநேயம் அந்தணர் (1) மானூர்ச்சபை விதிகளாவன ஊர்க்கரையாளர் மக்களில் மந்திரப் பிரமாணமும் தருமமும் கற்ற ஒருவனே, ஊர் மன்றில் தன் தந்தையின் கரைக்குரிய உறுப்பினனாக இருக்கலாம்; அதே தகுதி யுள்ளவனே, விற்கப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப் பட்ட அல்லது பெண்ணுடைமையாகப் பெறப்பட்ட கரைக்குரிய ஆளாக மன்றில் இருக்கலாம். (2) இங்ஙனம் மூவகையில் அடையப் பெற்ற கரை. ஒரு வனை முழுவுறுப்பாண்மைக் (Full membership) கன்றி, கால் அரை முக்கால் உறுப்பாண்மைக்கு உரியவ னாக்காது.) கரையை விலைக்கு வாங்குவோர். ஒரு வேதம் முழு வதையும் அதன் பரிச்சிட்டங்களோடு நன்றாக ஓதி யிருப்பானையே, தம் கரைக்குரிய உறுப்பினனாகத் தேர வேண்டும். முழுவுறுப்பாண்மை யில்லாதார், ஊர்க்காரியங்களை நிறைவேற்ற எந்த வாரியத்திலும் இருக்க முடியாது. இத்தகுதியெல்லாமுடையோர், ஊர்மன்ற நடவடிக்கை களில். ஒவ்வொரு முன்னீட்டையும் (Proposal) கட்டுப் பாடாக எதிர்க்கவுந் தடுக்கவுங் கூடாது. இங்ஙனம் தடங்கல் செய்தோர், தாமும் தம் சார்பாளரு மாக, தம்மாற் செய்யப்பட்ட ஒவ்வொரு தடங்கற்கும். ஐங்காசு தண்டமிறுத்து விதிகட்குங் கட்டுப்படுவாராக. (சோழவமிசச் சரித்திரச் சுருக்கம், பக். 53). இவ்விதிகளால், மானூர் அந்தணப் பெருமக்கள், ஊர் மக்களின் குடவோலைத் தேர்தலாற் பெறக்கூடிய ஊர் மன்ற உறுப் பாண்மையை, நிலையான சொந்தவுடைமையாக்கிக் கொண்டி ருந்தனரென்பதும்; அவ்வுறுப்பாண்மை பிறவுடைமைகள் போல் விற்கப்பட்டும் விலைக்கு வாங்கப்பட்டும் பெண்டனமாக அளிக்கப்பட்டும் வந்தன என்பதும்; அறியப்படும். (ப.த.ஆ. அந்தணர் அழகிய குளிர்ந்த அருளையுடையவர். அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு அன்பு செய்தல், இது துறவியர்க்கே இயலும். அதனால் அருளுடைமையைத் துறவு நிலைக்குரிய முதல் அறமாகக் குறித்தார் திருவள்ளுவர். அந்தணர் என்னும் பெயர் முதன்முதல் தமிழத் துறவியரையே குறித்தது. (தி.ம.54. ததி2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/187&oldid=1431683" இலிருந்து மீள்விக்கப்பட்டது