பக்கம்:தேவநேயம் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

204 தேவநேயம் அரசர் இயல்பு புறம் ஏற்றமாயிருப்பதுமான, களிற்றியானை அரசுவாவாதற்குத் தக்கதாம் (பிங்கலம்). அரசுவாவிற்கும், இடுகுறி போன்ற இயற்பெயரும் காரணக் குறியான சிறப்புப் பெயரும், இடப்பெறும். (14) தேர் : அரசன் ஊருந்தேர், மற்றத் தேர்களினும் உயர்ந்தும், ஓவிய வேலைப்பாடமைந்தும், விலையுயர்ந்த அணிகலங்களும் சிறந்த குதிரைகளும் பூட்டப் பெற்றும், இருக்கும். பொதுவாக அரசன் ஊரும் ஊர்திகள் மூன்றும், அரசமாண்பிற் கேற்ப, ஒப்புயர்வற்ற ஆடையணி யலங்கரிப்புடையனவாயிருக்கும். சங்ககாலத்தில், வேட்டைக்குத் தேரிலும் குதிரை மேலும் செல்வ தும், போரும் நகர்வலமும் நாடுகாவலும் ஆகிய பிறவற்றுக்குத் தேரிலும் தேர் செல்லாவிடத்து யானைமேலும் செல்வதும், அரசர்க்கு வழக்கமாயிருந்தது. பிற்காலத்தில் தேர் பயன்படுத்தப் பெறாமையால், வேட்டை தவிரப் பிறவற்றிற் கெல்லாம் யானைமீதே அரசர் சென்றனர். (15) மனை : அரசன் வாழும் மனை அரண்மனை எனப்படும். மதிலும் கோபுரமுஞ் சுருங்கையுமாகிய அரணுடைமைபற்றி, அது அரண்மனையெனப்பட்டது. அதற்குக் கோயில் பள்ளி நகர் மாளிகை எனப் பிற பெயர்களுமுண்டு. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரு முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய என்னுஞ் சூத்திரத்தில் (1571), தொல்காப்பியர் படையையும் அரசர் சின்னங்களுடன் சேர்த்துக் கூறினார். அரசச் சின்னங்கள் : முடி, குடை, கவரி, தோட்டி, முரசு, சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், நீர்க்குடம், பூமாலை, சங்கு, கடல், மகரம், ஆமை, இணைக்கயல், சிங்கம், தீபம், இடபம், ஆசனம் என 21 வகைப்படுவதாகச் சூடாமணி நிகண்டு கூறும். இவற்றுட் பல, மங்கலப் பொருள்களும் அரணும் உவமையுமாம். அரசர் இயல்பு அரசனுக்கும் குடிகட்குமுள்ள தொடர்பு தந்தைக்கும் மக்கட்கு முள்ள தொடர்பாகும். குடிகளை அரவணைத்துக் காப்பவனே யன்றி, அதிகாரத்தோடு ஆள்பவன் சிறந்த அரசனல்லன். அரசனைக் குறிக்கும் பெயர்களுள், காவலன் என்பது ஒன்றாகும். அரசனுக்கரிய தொழில் குடிகளைத் திறமையாய்க் காப்பதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/221&oldid=1431791" இலிருந்து மீள்விக்கப்பட்டது