பக்கம்:தேவநேயம் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

தேவநேயம்


நம் பாவாணர்

என்சாதிக் காரர் இவர் என்ப தாலோ
     என்சமயம் இவர்சமயம் எனநி னைத்தோ
என்கட்சிச் சார்புடையார் எனம கிழ்ந்தோ
     எவரும் பாவாணர்தமைப் போற்ற வில்லை.
தொன்மொழியாம் தமிழ்மொழியை மீட்ப தற்காய்த்
     தோன்றியவர் பாவாணர் எனத்தெ ளிந்தே
'என்தலைவர் தமிழ்த்தலைவர் இவர்தான்' என்றே
     ஏற்றிவைத்துத் தமிழ்நெஞ்சர் போற்று கின்றார்.

பொருள்திரட்ட வேண்டுமெனும் ஆவல் கொண்டோ
     புகழ்சேர்க்க வேண்டுமெனும் நோக்கத் தோடோ
வரும்பதவி விருதுகளை மனத்தில் வைத்தோ
     வரைந்தவரா பாவாணர்? இல்லை, இல்லை.
இருள்நிறைந்த பெருங்குகையில் உழலு கின்ற
     எந்தமிழர் புதுவாழ்வு பெறுதல் வேண்டும்
ஒருநோக்கே பெருநோக்காய் எடுத்தார் தூவல்.
     உருவான படைப்பெல்லாம் அறிவின் பாய்ச்சல்!

'கூலி'யெனும் சொல்லறிவோம்; இச்சொல் லேதான்
     கூறுபல மொழிகளிலும் ஏறி நிற்கும்.
கூலத்தைத் தவசத்தைத் தானி யத்தைக்
     கொள்ளும்உடல் உழைப்பினுக்குப் பகர மாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேவநேயம்_1.pdf/9&oldid=1479798" இலிருந்து மீள்விக்கப்பட்டது