பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிமண்ணும் கையுமாக


வீரர் வாளும் கையும் க இருந்து நாட்டையும் வீட்டையும், மானத்தையும் காப்பாற்றுகின்றனர்" .

தர்ப்பையும் கையுமாக இருந்து கொண்டு வஞ்சகர் கள், மன உறுதியற்றவர்களை மயக்கியம், மிரட்டியும் அடக்கி வருகின்றனர்

'பேனாவும் கையுமாக நீ இருக்கிறாய் பரதா! பயன் என்ன?--என்று வீரன் சலித்துக்கொண்டு கேட்டான்.

திடீரென்று உனக்கேனப்பா, கைகளின் நிலை பற்றிய ஆராய்ச்சியிலே ஆர்வம் பிறந்து விட்டது?" என்று வீரனை நான் கேட்டேன்.

"கை செய்யும் வேலை கருத்தைக் காட்டுவதுதான் என்றான் வீரன். - உண்மைதான்! - கருத்து இருக்கும் விதத்திற் கேற்றபடிகான் கையில் நிலையும் இருக்கும், ஆனால் இன்று என்ன விசேஷம்? இந்த ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாய்? என்று மேலும் கேட்டேன். - அந்தக் கரங்கள், விமான விசையைப் பிடித்துச் செலுத்துகின்றன; டாக்கிகளை ஓட்டுகின்றன; பீரங்கி களைப் பேச வைக்கின்றன; துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டுள்ளன; எதிரியின் பிடரியிலே பாய்க்கின்றன;