பக்கம்:தேவலீலைகள், அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தேவலீலைகள் !


"தூதா! என்ன சேதி எங்கே புறப்படச் சொல்கிறாய்?"

“தங்களுடைய நெடுநாளைய எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ள அபூர்வமான சமயம் வாய்த்துவிட்டது, கிளம்புங்கள் எங்கே ?" "பாரிஷதன் மாளிகைக்கு" "ஆஹா! - அந்தப் பேச்சை, ஏனடா தூதா எடுத் - தாய்? அங்கு அந்த ரூபாவதி வபுஷ்டமை என்னை வாட் டியபடி இருப்பாளே! நான் கெஞ்சியும் - கொஞ்ச மறுத்தாளே! - என் மனம் பாகாய் உருகியும் அந்தப் பாவை. - இந்தப் பாவிக்கு இணங்கவில்லையே. என் செய்வேன்? எவ்வாறு உய்வேன்? என்னென்ன. வெல்லாமோ செய்து பார்த்தேன்; என் முழுத் திறமை யையும் காட்டினேன், முடியவில்லையே. வபுஷ்டமை மீது கொண்ட மோகமோ தணியவில்லை.. அவளோ இணங்கவில்லையே, ஏங்குதே என் மனம்" "என்ன இது. இப்படிச் சோதிக்கலாமோ அகலிகையின் ........." 'அது - சுலபமாக முடிந்துவிட்டது. சுலபமாக முடிந்தது மட்டுமல்லடா தூதா? - அவளுக்கு, நான் இந்திரன் என்று தெரிந்ததும், ஆனந்தமும் பிறந்தது. பெரிய இடமாயிற்றே 'என்ற பெருமையுமடைந்தாள்; இந்த வபுஷ்டமை அப்படியில்லையே!"