பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I0 I மெளனம் ஒரு பாஷை ஆவது கிடையாது. பார்வதியின் கண் எதிரில், பொம்மலாட்டம் ஒன்று ஊமைத்தனமாக ஆட்டம் காட்டிற்று - மூன்று நாட் களுக்கு முன்னதாக, தலை போகிற அவசர ஆத்திரத் தில் சமூகவேசி மாதங்கியோடு அவளுடைய காரிலே இதே செந்தில் பறந்து சென்றது பொய்யா ? அதற் கெல்லாம் முந்தி, இதே செந்தில் பதிப்பகத்தின் வாசலில், பொது ஜனங்கள் புடை சூழ்ந்து மரியாதை தெரிவிக்க, தாராவோடு ஸ்கூட்டரில் வந்து அடிபட்டு வீழ்ந்து கிடந்தானே அது கதையல்லவே ?- கண்களிலே தொடு வானம் காட்டித் தலையை ஏறிட்டு நிமிர்த்தினாள் கன்னி இளம்மான். செந்தில்நாதன் வேட்டியை மடித்து டப்பா கட்டு’ கட்டியபடி, "நான் கொடுத்து வைக்காத பாவி வர்றேன் !' என்று நா தழதழக்கக் கூறிவிட்டு, அங் கிருந்து பதட்டத்தோடு நகர்ந்தான். கண்களிலே சுடுநீர் மின்னியது. மிஸ்டர் செந்தில் ! நில்லுங்க : நானும் வர்றேன் ! -- எப்போதும் எனக்கு நானேதான் துணை இருக்கிறது. வன்மை ; இப்ப நீங்க வேறே எனக்குத் துணை இருக் கீங்க, அப்புறம் எனக்கு என்ன கவலை ?” 'பார்... மிஸ் பார்வதி ! தாங்க்யூ வெரி மச் ... ஆபத் தான அவசரம்; அவசரமான ஒரு பாசக் கடமை...ம் புறப்படுங்க !” பரிசுத்தமான விடியல் பொழுதுகளிலே, தன்னைப் பார்த்து விட்டுப் போவதற்கென்று பரிசுத்தமான அன் போடுதான் இந்தச் செந்தில் உண்மையிலேயே இங்கே அடிக்கடி வந்து கொண்டேயிருந்தானோ ? - தவித்தாள்