பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 1 7 காற்றடித்துத் தீக்கணப்பிலே விழுந்துட்ட உயிர்ப் பூவாகத் துடிக்கிறாள் பார்வதி; விதியின்சவாலுக்கு எதிர்ச் சவால் விடுக்க முடியாத ஆற்றாமையில், வேதனையில், நெட்டுயிர்ப்பில் விம்முகிறாள் ; பேசுகிறாள்: அழா தேப்பா, தம்பி, அழாதே ! நீ நூறு எண்ணறதுக்குள்ளாற. நான் நம்ம வீட்டிலே வந்து நின்னுடுறேன், பாரேன் ராமையா, நம்ம அம்மாவையும் அப்பாவையும் நீதான் பத்திரமாகப் பார்த்துக்கிட வேணும். பயப்படாதேப்பா, அப்பா அம்மாவுக்கு ஒண்னுமே ஆயிடாது !... எதுக்கும் மூணாவது வீட்டு சீதாப்பாட்டியைத் துணைக்கு வந்து இருக்கச்சொல்லேன் !...” தோழிகளிடமும் விவரம்சொல்லி வீட்டுத் துயரத்தை வெளியிலே காட்டிக் கொள்ளாமல், சமர்த்தாகவே புறப்பட்டாள் பார்வதி !