பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30 வலது கைச் சுட்டுவிரலைத் தொட்டாள். நகக்கண்ணிலே ரத்தக்கறை தரிசனம் தரவே திடுக்கிட்டாள். கன்னிமனம் கனிந்திட கயல் விழிகள் கசிகின்றன. ஐயையோ, விரல் பலமா அடிபட்டுப் போச்சு ரத்தக்கறை இன்னமும் மறையக் காணோமே ? நான் அப்பறம் இதுக்கு முதல் உதவி செய்கிறேன்,” என்று சொல்வி, எச்சிலைத் தொட்டு ரத்தக்கறையை அழித்தாள். 'ஆல்ரைட்... அட்டென்ஷன் ப்ளீஸ் ' - ஒரவிழி காட்டி ஆணை கூட்டினாள், கெட்டிமேளம்...கெட்டி மேளம் !' என்றாள் அப்பா - அம்மாவுக்கு, ஆணைச் சத்தம், கேட்கவேண்டும் அல்லவா ? என்ன ஆச்சர்யம் ! கெட்டி மேளம் கொட்டி முழங்கியது. நாதசுரம் கொட்டாமலே முழங்கியது அம்முக்குட்டி டேப் ரெகார்டருடன் நின்றாள். 'அக்கா, அக்கா சுற்றிலும் பாருங்க : உங்களோட பூஜை அறைத் தெய்வங்க எல்லாம் உங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்குது சேவிச்சுக்கிடுங்க - முருகையன் ! ராமையாப் பயலுக்கு வாயெல்லாம் பல். கூப்பிய இரு ஜோடிக் கரங்களும் கூப்பியபடியே இருந்தன. இத்துணை சந்தோஷத்தயுைம் இத்தனை நாட்களாக இந்தப் பாருக்குட்டி எங்கே ஒளித்து மறைத்து வைத்திருந் தாளோ?- 'அப்பா...அம்மா ! உங்க இரண்டு பேரையும் திரிகரணசுத்தியோட நானும் மாப்பிளையும் கும்பிட்டுக் கிடுறோம். மாலையும் கழுத்துமா நிற்கிற உங்க பாருக் குட்டிக்கு உங்க மாப்பிள்ளை தாலிகட்டப் போறார் !