பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 47 இட்டிருக்கிற அந்த ஆணையைக் கட்டிக் காத்து நிறை வேற்றி வைக்கவும் என்னாலே முடியுமாக்கும் மறந் திடாதீங்க ...அப்பாலே எம் பேரிலே வருத்தப்பட்டுக் கண்ணிர் வடிச்சு எந்தப் புண்ணியம் கிடையாதுங்க : கிடைக்காதுங்க ... ஆமா, நான் முடிஞ்ச முடிவாய்ச் சொல்லிட்டேனுங்க !...” நெஞ்சை இறுக்கமாகவே பற்றிக் கொண்டவளாகஎந்தப் பற்றுமின்றிப் பற்றி கொண்டவளாக, நடை பழகுகிறாள் பார்வதி ...

அதோ, டால்ஃபின்!... 'எனக்கு அக்கினிப் பரிட்சை நடத்தவே காத்துக்கிட்டு நிற்குது அந்த டால்ஃபின்! பார்வதி இப்பொழுது நெஞ் சொடுங்கி உள்வட்டத்தில் விம்மிச் சுழல்கிறாள் ! தோட்டம் வந்தது. நின்றாள் பார்வதி. சுடுநீரிலே மஞ்சள் தாலி சுடுகிறது ! அதோ! ... அந்த ஒற்றை ரோஜாப்பூ மாத்திரம் உலகாளும் உமையவளாம் அன்னை பார்வதியைப் போலவே ஒற்றைக் காலிலே வீர நேசத்துடனும் தீர வைராக்கியத் துடனும் தவம் செய்த வண்ணம், அழகாகவும் அன்பாக வும் புன்னகை செய்து கொண்டிருக்கிறது. இன்னமும்கூட ! வேடிக்கைதான்!. வாழிய செந்தமிழ் 酱 爱 来