27
"எல்லாத்தையும் ஏறக்கட்டிக்கினு எல்லாரும் வயிற் றுப்பாட்டை கவனிங்க, நாம் எல்லாருமே சாண் வயிற் றுக்குதானே இத்தனை பாடுபட வேண்டியிருக்குது; ஊம், ஏந்திரும்மா, பார்வதி'
கனகசபை மனிதர் !
திரைஉலகம் அட்டகாசமான மினுமினுப்புடன் சுழலத் தொடங்கி விட்டது !
ஆயர்ப்பாடி மாளிகை தரிசனம் தந்தது. ஆடும் தீபங்கள் ஆடின.
உணவு வேளை :
ஒய்வுக்கூடத்தின் மகளிர் பகுதியில் சாப்பாட்டுக்கடை ஆரம்பமாயிற்று.
வத்சலா : தயிர்ச்சாதம். பார்வதிக்கு அளிக்கப்பட்ட படி சாம்பார்ச் சோறு.
நூர் உன்னிசாவுக்குப் பரோட்டா பாயா ரொம் பவும் பிடித்தம். -
ரோசியின் பங்கில் தோசையும் கறிகுருமாவும் சுவை காண்பித்தன.
உணவு வகைகள் பாகம் பிரித்து கொண்டன. நள பாகம் பிரித்துக் காட்டின.
யூசுப் முட்டை ஆம்லெட்டில் பாதியைக் கொண்டு வந்து பார்வதியிடம் க்ொடுக்க, பார்வதி அதை மூன்று பாகமாக்கித் தோழிமார் இருவரிடமும் கொடுத்தாள்;
ஒரு துண்டு அவளுக்கு. பாவம், வத்சலா - அவள் சுத்த சைவம்,