பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


"எல்லாத்தையும் ஏறக்கட்டிக்கினு எல்லாரும் வயிற் றுப்பாட்டை கவனிங்க, நாம் எல்லாருமே சாண் வயிற் றுக்குதானே இத்தனை பாடுபட வேண்டியிருக்குது; ஊம், ஏந்திரும்மா, பார்வதி' கனகசபை மனிதர் ! திரைஉலகம் அட்டகாசமான மினுமினுப்புடன் சுழலத் தொடங்கி விட்டது ! ஆயர்ப்பாடி மாளிகை தரிசனம் தந்தது. ஆடும் தீபங்கள் ஆடின. உணவு வேளை : ஒய்வுக்கூடத்தின் மகளிர் பகுதியில் சாப்பாட்டுக்கடை ஆரம்பமாயிற்று. வத்சலா : தயிர்ச்சாதம். பார்வதிக்கு அளிக்கப்பட்ட படி சாம்பார்ச் சோறு. நூர் உன்னிசாவுக்குப் பரோட்டா பாயா ரொம் பவும் பிடித்தம். - ரோசியின் பங்கில் தோசையும் கறிகுருமாவும் சுவை காண்பித்தன. உணவு வகைகள் பாகம் பிரித்து கொண்டன. நள பாகம் பிரித்துக் காட்டின. யூசுப் முட்டை ஆம்லெட்டில் பாதியைக் கொண்டு வந்து பார்வதியிடம் க்ொடுக்க, பார்வதி அதை மூன்று பாகமாக்கித் தோழிமார் இருவரிடமும் கொடுத்தாள்; ஒரு துண்டு அவளுக்கு. பாவம், வத்சலா - அவள் சுத்த சைவம்,