பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్రీన్ ராத்திரி சாப்பாடு முடிந்ததும், கைக்கு மெய்யாகத் தாம்பூலம் தரித்து, துளி அளவுக்குப் பன்னீர்ப் புகையிலை யைக் கடைவாயில் சுவாரசியமாக அடக்கிக் கொண்டு ஆனந்தப் பட்டால்தான், சிவகாமிக்கு உறக்கம் பிடிக்கும். வழக்கம்போல் தாம்பூல சம்பிரதாயத்தைச் சட்டமாக முடித்துக் கொண்ட ஆறுதலோடு தலையணையை இழுத்துப் போட்டுத் தரையிலே ஊன்றிச் சாய்ந்திருந்த கைகளில் தலை சாய்ந்து கிடந்தவள், அசந்து மறந்த நிலையில், பன்னிர்ப் புகையிலையின் எச்சிலை மிடறு விழுங்கவே, காட்டுத் தனமாக இருமம் வெடித்தது; கண் கள் சிவந்து வழிந்தன; முகமெல்லாம் மாறியது ; மூச்சுப் பேச்சு இல்லை. பார்வதி பதறினாள். ஆத்மநாதன் வெளியே காற்றாட நின்றவர், உள்ளே ஒடி வந்து சின்னப்பிள்ளை மாதிரி விம்மி விம்மி அழுதார். உயிருக்கு இனியவளின் அலுத்துச் சலித்த மார்பை விரல் கள் நடுங்கத் தட விவிட்டார். மார்பகத்தில் சாட்சி சொல்லி வடுபாய்த்திருந்த தாலித் தழும்பில் அலங்கோல மாகக் கிடந்த மங்கலத் தாவியைப் பார்த்ததுதான் தாம தம் . சிவகாமி !' என்று ஓங்கிப் புலம்பினார். பார்வதியும் அழுதாள். ராமையாவுக்கும் அழுகையில் பாகம் கிடைத்தது. நடந்த கண்ணிர்க் கலாட்டாவில் சிவகாமியின் கண்கள் சிவந்தன.