பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


ஆத்மநாதனுக்கு வாயெல்லாம் சிரிப்பு ஆகிவிட்டது. இல்லத்தரசியின் சுருக்கம் விழுந்து வெளுத்துக் கிடந்த நெற்றிமேட்டில் ஒதுங்கிக் கிடந்த வெள்ளை மயிரிழை களை நோகாமல் ஒதுக்கி விட்டார். பிறகு, நெஞ்சோடு நெஞ்சை இருத்தி, சிவகாமி! சாந்திமுகூர்த்தம் நடந் தப்போ நாம ரெண்டுபேரும் செஞ்சுக்கிண ஒப்பந்தத்தை மறந்திட மாட்டியே ?. நீ போறதானாலும், என்கிட்ட ஒரு வார்த்தை கட்டாயம் சொல்லிப்பிடு; நான் போறப்பவும், உன் கையிலே நிச்சயம் சொல்லிப்பிடு வேன் என்றார். விதரணை புரிந்த அக்காவும் தம்பியும் விவரம் புரிந்து விம்மி வெடித்தனர். 'கடைசிப் பட்சம் நம்ம பாரு குட்டியை மாலையும் கழுத்துமாவும் தாலியும் மெட்டியாவும் பார்க்கிற மட்டுக்குமாவது, நாம ரெண்டு பேரும் சத்தியமாய் உசிரோட இருப்போமுங்க, அத்தான் ! ... இந்த ஒரு நாயமான பிரார்த்தனையைக் கூட நல்லபடியா நிறை வேற்றித் தர எந்த ஒரு தெய்வத்துக்கும் முடிய லேன்னா - தெரியலேன்னா அப்புறம் தெய்வம் உண் டுண்ணு நம்மாலே எப்படி நம்ப முடியுமாம்.? அப்பாலே நாலு பேரைப் போலவே, நாமளும் சாமியும் இல்லே; பூதமும் இல்லே அப்படின்னு பிரசங்கம் பண்ண வேண் டியதுதான். இப்படியெல்லாம் தர்க்கமும் குதர்க்கமும் பேச எங்கே கற்றுக் கொண்டாள் சிவகாமி ?- அவள் வாயை அவர் பொத்தினார். கண்ணிரோடு உள்ளே சென்றவள் தண்ணிரோடு வெளியே வந்தாள். "ராத்திரி சாப்பிட வேண்டிய ரத்த விருத்தி மாத்திரையைச் சாப்பிடல்லேதானே ?' என்று கேட்டவாறு, குழாய் மாத்திரையையும் தம்ளர் தண்ணீரையும் நீட்டினாள் பார்வதி.