பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HO ராஜ குமாரியைக் குறி வைத்து உஸ்மான் சாலை நெடுகிலும் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாக நடந்தாள் பார்வதி. பாசத்தின் கைப்பாவையாகிக்குமைந்து கொண் டிருந்தவளுக்குப் பனகல் பூங்கா ஒட்டி வந்து விட்டதை உணர்ந்ததும், ஆறுதல் அடைந்தாள். நட்டநடுநிசியில் ஏதோ ஒரு பணக்காரச் சுவர்க்கடி காரம் மட்டும் சிவராத்திரி நோன்பிருந்து, விழித்திருந்து, பன்னிரெண்டு முறை முறையாகவே மணி அடிக்கிறது அவளை எதிர்த்துப் பாய்ந்து திரும்பி மடங்கி நூதன மான வெளி தேசத்துப் பிளஷர் கார் ஒன்று, அவளை முன்னே மறித்துச் சரேலென்று நின்றது. பார்வதி ஹெல்லோ !' என்று கூவி, காரின் முன் ஆசனத்தில் இருந்த மின்னல் கொடியாள் ஒருத்தி ஜம்பமாக அழைத்தாள். க்வீன் மேரீஸிலே உன்னோடு பி. ஏ. படிச்ச அதே சாட்சாத் மாதங்கியே தான் நான் !'. என்றாள். தோழியைக் கூர்ந்து பார்த்ததும், ஒ . அதே மாதங்கி தானா நீ !' என்று ஆனந்தப் பரவசம் தாங்காமல் கூவினாள். பார்வதி. "கூடிய சீக்கிரத்திலே எனக்கு மாரேஜ் நடக்கப் போகுது நீதான் முன்னே நின்னு நடத்திவைக்கோணும்: பார்வதி !’ "அப்படியா ? ரொம்ப மகிழ்ச்சி !'