பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


நின்றது. 'என் வழி எனக்குத் தெரியும். என் பின்னாலே வராமல் நீ மரியாதையாகப் போயிடு ; யாரானும் பார்த்தால், ஏதானும் நினைச்சுப்பாங்க அசிங்கம் !' என்று கண்டித்தாள் பார்வதி. "இதிலே என்னாங்க அசிங்கம் இருக்க முடியும் ? ஊரும் உலகமும் கெட்டுக் கிடக்குது ; வேளை கெட்ட வேளையிலே, வயசுப் பொண்னு நீங்க ஒண்டியாப் போlங்களேன்னு இரக்கப்பட்டுச் .ெ சா ன் னே ன் வண்டிலே ஏறிக் குந்துங்க : ஒரு நொடியிலே உங்களை உங்க வீட்டண்டை கொண்டு போய் விட்டுப்புடுவேனுங்க ஊம், ஏறிக்கங்க !' கையெடுத்துக் கும்பிடுகிறான் ... அந்த இளைஞன். அவன் ரிக்ஷாவாலாதானா ? சத்தியமாகவா ? ... கண்கள் கலங்க, அவனை ஆழமாகப் பார்த்தாள் பார்வதி. 'என் பேரிலே இவ்வளவு தூரத்துக்குக் கவலையும் அக்கறையும் வச்சிருக்கிற நீ யார் ?' என்று கேள்வி கேட்டாள். ',நானும் உங்களுக்கு ஒரு தம்பிதான் ! பேரு முருகையன் !' 'அப்படியா ? நான் உங்களை நம்பலாமா ?” 'நான் உங்களை நம்புறப்ப, நீங்க என்னை நம்பப்புடாதுங்களா, அக்கா ?” மேனி புல்லரித்தது. "வாஸ்தவத்தான் !' என்றாள் பார்வதி : குரல் கம்மியிருந்தது. 'அந்தக் கார் மோகினி, இன்னிக்கு ஒங்க பேரிலே குறிவச்சிருக்கா போலே - தனியாப் போனா, மறுபடியும் குறுக்கு மறிச்சு உங்களைத் துரக்கிப் போட்டுக்கினு