பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


போகாமல் ராத்திரிக்குத் தூங்கவே மாட்டாளுங்க, அக்கா !” 'ஏம்ப்பா, நீ யாரைச் சொல்றே ? சமூகச் சேவகி மாதங்கியையா ?” 'சமூக சேவகியா அவள் துT ... ! அவள் ஒரு சமூக வேசி ... பச்சையாய்ச் சொன்னா, அவள் ஒரு பச்சைத் தேவடியாள் !' "நிஜமாத்தான் சொல்லுறியா ?” 'சத்தியமாவும் சொல்றேனுங்க ... ஏங்க ஏழைன்னா அவனுக்கும் சத்தியம் பேசத் தெரியாதுங்களா ? தெரிய வேண்டாங்களா ?” பார்வதி மெய்சிலிர்த்தாள். ஆனால் ... மெய்" சிலிர்த்து விடவில்லை. அப்பா இந்நேரம் நெஞ்சு வலியால் எப்படி எப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ ? தெய்வமே ! பார்வதி உருகித் தவித்தாள் ; தவித்து உருகினாள் ; ... "ம் புறப்படுப்பா !' என்று உத்தரவு பிறப்பித்தாள் தற்போது : பார்வதி விழிப்புணர்வுடன் ஜாக்கிரதையாகவே அமர்ந்திருந்தாள். அந்த எச்சரிக்கை உணர்வின் உறுத்தல் தன்னை என்னவோ செய்தது போலவும் அவள் உணர்ந்தாள் பாசத்தைப் போன்றே நட்பும் எட்டும் தொலைவிலேயே இருந்தால் என்னவாம் ? மணிச் சத்தம் ஒரேயொரு தரம் கேட்டது.