பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


வெளிக் கதவை திறந்து வைத்துக் கொண்டு, விளக்கின் அடியில் தூணில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தார் பெரியவர் ஆத்மநாதன். பார்வதிக்குப் போன உயிர் திரும்பியது!-அப்பாவுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை!-தெய்வமே. 'அக்கா நான் போய் வரட்டுமா ?” -ரிக்ஷா போனது. "ஏதாச்சும் சாப்பிட்டுட்டுப் போ. ராத்திரியே மோர் காணல்லே. இரு பானைத் தண்ணி ஒரு குவளை கொண்டு வர் றேன்!" காக்குருவி எங்கேயோ, ஏனோ கத்திக் கொண்டிருக் கிறது. 'அக்கா, அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசு விஷயத்திலே நீங்க எப்பவும் உஷா ராகவே இருக்க வேணும்!” பாசப் பிரிவினை தற்காலிகம்!...