பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) என் கடன் பணிசெய்து கிடப்ப்தே' எனவரும் அப்பர் திருவாக்கைக் கடைப்பிடித்துப் போற்றிக் கழகத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று ஊக்கத் துடனும், ஆக்கம் பெருகவும், நடத்திவரும் தலைவர் திருவாளர் வ. சுப்பையா பிள்ளை அவர்களும், அவர் களுக்குப் பக்கத்துணைவர்களாய் உடனிருந்து கழக வேலைகளை ஏற்று இயக்கிவரும் பிற பெரியார்களும், உதவியாளர்களும் திரு. நெல்லையப்பர் திருவருட் டுனையால் நீடுழி எல்லா ந லங் க ளே யு ம் பெற்று வாழ்வார்களாக. * நாவரையர் புகழ்மொழிகள் வரைந்து கூறி கயந்தவர்செய் திருத்தொண்டு வியந்து வாழ்வாம் ? I -சேது புராணம். திருச்சிற்றம்பலம் 292, லிங்கசெட்டித்தெரு, சென்னை-1. } வ. சு. செங்கல்லுராய பிள்ளை, 15-12-1958.