பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உரைகல்

- தேவார ஒளி நெறிக் கட்டுரை [எழுதியவர்: ஸ்ரீ ராவ்ஸாஹெப் வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள் எம். ஏ; கிடைக்கும் இடம்: 292, விங்க செட்டி தெரு, சென்னை ; விலை ரூ. 2-8-o]

ஸ்ரீ ராவ்ஸாஹெப் வி. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள் தமிழாராய்ச்சியாளர். அவர் தம் தந்தையார் வெளியாக்கிய திருப்புகழைப் பின்னும் அழகாகப் பதிப்பித்து ஆராய்ச்சியுரையும் எழுதிச் சேர்த்துத் தழிழ்ப் புலவர்களின் பாராட்டைப் பெற்றவர். இப்போது, தேவார ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ள பொருளை வகைப்படுத்தித் தொகுத்துக் தனித் தனித் தலைப்புக் கொடுத்து அச் செய்திகளைத் தொடர்புபடுத்திக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். பரந்து கிடக்கும் தேவாரப் பாசுரங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக விரவியுள்ள செய்திகளைக் கோவைப்படுத்தி எழுதிய இத் தொண்டு பல ஆராய்ச்சிகளுக்கு மூலக் கருவாக உதவும். பல நாளாக உழைத்த உழைப்பின் பயன் இது. இதனைத் தமிழ்ப் புலவர்களும் தமிழன்பர்களும் பெற்றுப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள் என்று நம்புகிறோம்.