பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை முத்தமிழ் "நான்மறை ஐந்தெழுத்தான் மூவாத் திருவருள். கைவந்த சேவார் வெல்கொடிச் சிவனே விழுமிய முழு முதல் எனக் கொண்டொழுகும் தொன்மைச் செந்தமிழ்ச் சான் ருேர் உலகுய்யத் தேற்றியருள்வன முப்பொருள் உண்மைகளேயே யாம். இவ்வுண்மையினைத் திருமாமுறைகளும், மெய்கண்ட நூல்களும் உள்ளங்கை நெல்லியெனத் தெள்ளத் ெ தளிவிக்கும் ஒப்புயர்வில்லாச் செப்பருஞ் சீரிய நூல்களாகும். இந் நூல்களைக் செந்தமிழன்பர்களும் செந்நெறிச் செல்வர்களும் தந்தம் உயிர் நால் எனக் கொண்டு நாளும் ஒதி ஒழுகுதல் வேண்டும். இவற்றின் பெருமைகளைக் திருவருட் கண்ணுல் கண் டுனர்ந்த மெய்யடியாரோருவர் வருமாறு ஒதியுள்ளார் : " வேதம் பசுவதன் பால் மெய்யர் கமம்கால்வர் ஒதுங் தமிழதனின் உள் ளுறுகெய்-போத மிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்த தமிழ் நூலின் திறம்.' வேதம் -- திரு வள்ளுவ நாயனாருளிய திருக்குறள். ஆகமம்திருமூலநாயனாருளிய திருமந்திரம். கால்வர் ஒதுங் தமிழ் - தமிழ் மாமறையும் மறை முடியும். மெய்கண்டான் செய்த தமிழ்சிவஞானபோதம். இவை நெய்யும் சுவையும்போன்று ஒற்றித்து கின்று உலகை உய்விக்கும் செந்தமிழ்க் கருவூலங்களாகும். நெய்யனைய நால்வர் ஒதுங் கமிழுள் மூவாருளியது தேவாரம் எனப்படும். அக் தேவாரம் ஏழு கிருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளது. * * * இவ்வேழு திரு முறைகளு ம் ஒருபுடை யொப்பாக த் திரு வரு ளாற்றல் ஏழினையும் சிறப்புறக்கொண்டு திகழ்வனவாம். இல் வேழும் சம்பந்தர் அருளியது மூன்று திருமுறைக ளெனவும்,