பக்கம்:தைத் திங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக அரங்கில் தைத் திங்கள்


தமிழர் திருநாள்:

தைப் பொங்கல் விழாவைத் 'தமிழர் திருநாள்' என்று வழங்கும் ஒருவகை மரபு உள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பொங்கல் விழாவைச் சிறப்புடன் கொண்டாடுவதால் இஃது இவ்வாறு வழங்கப்படுகிறது. அதிலும், தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் விழாக்களுக்குள் இது பெரிதும் சிறப்புடன் போற்றிக் கொண்டாடப்படுதலின் 'தமிழர் திருநாள்' என விதந்து கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு கூறும் தமிழர்களும் சிலர் உளர். அஃதாவது, - தமிழகத்தில் பொங்கல் விழா கொண் டாடப்படும் நாளில், வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுங்கூட விழா கொண்டாடப்படுவதால், இந்த நாளைத் 'தமிழர் திருநாள்' என்று குறிப்பிட்டுக் கூறுவது பொருந்தாது என்பது ஒரு சிலரின் கண்டுபிடிப்பு.

இந்த நாள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படினும், தமிழர்கள் கொண்டாடும் விழாக்களுக்குள் இது சிறப்பு விழாவாகப் பலநாள் தொடர்ந்து கொண்டாடப்படுவதாலும் வெளியிலிருந்து வந்ததாக இல்லாமல்-இடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைத்_திங்கள்.pdf/123&oldid=1323560" இலிருந்து மீள்விக்கப்பட்டது