40 தைத் திங்கள்
நெருடிக் கயக்கிக் கன்னத்தில் அடக்கிக் குதப்பித் தின்றுகொண்டிருக்கிறதாம். இந்தக் காட்சி, தை நோன்பு கொண்டவர்கள் பொங்கல் உணவு செய்து உண்ணும் காட்சி போன்றிருக்கிறதாம். இதனை நற்றிணையில் 'கொடிச்சி காக்கும்' என்று தொடங்கும் (22- ஆம்) செய்யுளிலுள்ள,
"நோன்பியர் தை ஊண் இருக்கையின்
தோன்றும் நாடன்”
என்னும் பகுதியால் அறியலாம். இதற்கு உரையாசிரியர் வரைந்துள்ள உரைப்பகுதி வருமாறு:"நோன்புடையார் தைத் திங்கட் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போலத் தோன்றா நிற்கும் மலை நாடன். தையூனிருக்கை-தைத் திங்கட் பிறப்பில் நீராடி அன்று ஆக்கப்படு மாட்சிமைப் பட்ட உணவு உண்ண இருத்தல்"-
மேலே காட்டிய நற்றிணைப் பாடல் பகுதியாலும் அதன் உரைப் பகுதியாலும், தைப் பொங்கல் உணவு விருந்து விழா ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பினை நன்கறியலாம்.