பக்கம்:தொடாத வாலிபம், 2010.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

உவமைக்கவிஞர் சுரதா 9 அழகிய மயிலே! அழகிய மயிலே! மீன்விழி மங்கை மாதவி என்பவள் சோழ அரசன் சபையில் ஆடிய நடனம் போல்உன் நடனம் சிறந்தது. அதைவிட உனது அழகு சிறந்தது! அகவும் மயிலே! அகவும் மயிலே! பிறரைப் புகழ்ந்து பேசினால் பெண்ணின் காதுகள் நிச்சயம் கசந்தே போய்விடும்! ஆகையி னாலே ஆடும் உயிரே! உன்னைப் புகழ்வதை பெண்ணின் காதிலே போட்டு விடாதே கேட்டுக் கொள்கிறேன்!