பக்கம்:தொடாத வாலிபம், 2010.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

கத்திக்குக் கத்தி அப்பம் இனித்திடும். கரும்பு இனித்திடும். அதைவிட அமுதம் இனித்திடும்-இவை அனைத்தையும் செந்தமிழ் வென்றிடும்! அறிஞன் உயர்ந்தவன். கலைஞன் உயர்ந்தவன். அரசியல் பண்டிதன் உயர்ந்தவன்-மனிதர் அனைவரி னும்கவி சிறந்தவன்! நட்பு நலன்தரும். முயற்சி பலன்தரும். நாத்திகம் நன்மையைத் தந்திடும்-மூட நம்பிக்கை யால்துயர் வந்திடும். கற்பு புகழ்தரும். காதல் சுகந்தரும். கல்வியால் அறிவு நயப்படும்-வெட்டும் கத்திக்குக் கத்தித்தான் பயப்படும். பட்டப் பகல்சுடும். கட்டை அனல்சுடும் பாலைவ னம்மிகவும் சுடும்- காதற் பிரிவு இவற்றைஎல் லாம்சுடும்!