பக்கம்:தொடுவானம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் :
———

நாண மெதற்கோ ?


ஆனந்தபைரவி ஆதி

எடுப்பு

நாண மெதற்கோ ? விழியே ! மலை
நாட்டுத் தலைவன்தோள் பார்த்துக் களித்திருக்க

மேல் எடுப்பு

காண நிலந்தோய்கின்றாய் ! காணுக்கால் பார்க்கின்றாய் !
கள்ளக் தனமுனக்கே சொல்லித் தந்தவ ராரே !

அமைதி

மலையென்றுந் தோளென்றும் அறியாத மயக்கமோ ?
வளர்காதல் பெருக்கத்தால் ஏற்பட்ட குழப்பமோ ?
சிலைபாய்ச்ச நுனிதேயும் என்கிற தயக்கமோ?
கருடனைக் கண்ட சேல்கள் மறைகின்ற விளக்கமோ?


19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/21&oldid=1342879" இலிருந்து மீள்விக்கப்பட்டது