பக்கம்:தொடுவானம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வேனோ ?


தோடி ஆதி

எடுப்பு

உன்னை மறந்துநான் வாழ்வேனோ ?என்
உயிருக்குயிர் ஆகிய செந்தமிழே ! அமுதே !

மேல் எடுப்பு

அன்னையை மறந்தாலும் அப்பனை மறந்தாலும்
அன்பு மனைவி மக்கள் அணைப்பை மறந்தாலும்

அமைதி

செந்நெல் விளைவினிலும் தீயிலும் காற்றிலும்
உன்னை யல்லால்வேறு பிரிதொன்றைக் காணுகிலேன் !
மன்னர் மடி தவழ்ந்து வாள் நுனி வீற்றிருந்து
வள்ளுவன் தொகைப்பாடல் உள்ளொளியாய் நிறைந்த

தமிழே ! அணியே !


18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/20&oldid=1342875" இலிருந்து மீள்விக்கப்பட்டது