இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வாழ்வேனோ ?
தோடி ஆதி
எடுப்பு
உன்னை மறந்துநான் வாழ்வேனோ ?—என்
உயிருக்குயிர் ஆகிய செந்தமிழே !— அமுதே !
மேல் எடுப்பு
அன்னையை மறந்தாலும் அப்பனை மறந்தாலும்
அன்பு மனைவி மக்கள் அணைப்பை மறந்தாலும்
அமைதி
செந்நெல் விளைவினிலும் தீயிலும் காற்றிலும்
உன்னை யல்லால்வேறு பிரிதொன்றைக் காணுகிலேன் !
மன்னர் மடி தவழ்ந்து வாள் நுனி வீற்றிருந்து
வள்ளுவன் தொகைப்பாடல் உள்ளொளியாய் நிறைந்த
தமிழே ! — அணியே !
18