பக்கம்:தொடுவானம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரச் சொல்லடி!



சண்முகப்பிரியா ஆதி

எடுப்பு

கண்டால் வரச்சொல்லடி!மாலை
கண்டால் வரச்சொல்லடி!

மேல் எடுப்பு

கட்டழகன் கெஞ்சைத் தொட்டுப்
பறித்த கள்வனைக்

அமைதி

கொண்டல் தவழும் மலைத் தோளான்பொய்கை
பூத்துக் குலுங்கு மரைத் தாளான்பகை
கண்டால் உயிர் வாங்கும் வாளான்தமிழ்க்
கற்றவர் கூட்டத்தை மீளான் !


மந்தி தழுவும் மலையோரம்பகல்
மங்கி இருள்வரும் நேரம்
வந்தால் இழிந்திடும் என்மனப் பாரம்!
வஞ்சியே! சொல்லடி!அவர்மனம் ஈரம்!


21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/23&oldid=1342891" இலிருந்து மீள்விக்கப்பட்டது