பக்கம்:தொடுவானம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாளைக் கடத்தலாமோ?



மோகனம் ஆதி

எடுப்பு


நாளைக் கடத்தலாமோ? மலை
நாட்டுத் தலைவனே ! நாளைக்கடத்தலாமோ ?

மேல் எடுப்பு

வாளையைப் போன்ற முன்கைத் தலைவியின் வளைகள் கழன்றன;கண்ணொளி அற்றது!

அமைதி

புன்னை உறவினை அன்னை உணர்ந்தனள்;
தென்னை குளக்கரை செல்லாதே என்றனள்;
கன்னற் கழனிக்கோ காவலும் மூண்டது;
மின்னல் இருள்என்றேன்: மெல்லியல் சோர்ந்தது!


கொள்ளிக்கண் புலிஏறு உருமிடும் சாரல்
கூச்சுக்கல் இருள்வழி பெரும்பாம்பின் சீறல்
உள்ளத்தை வாட்டுதே திருமணம் ஒன்றே
ஒண்டொடி உயிர்வாழ ஏற்ற மருந்தே!


22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/24&oldid=1342897" இலிருந்து மீள்விக்கப்பட்டது