பக்கம்:தொடுவானம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிர் தறிக்குமோ ?



தோடி ஆதி

எடுப்பு

பாடும் கருங்குயிலே உன்
பாட்டினால் என்மன
வாட்டம் பெருகு தந்தோ!

மேல் எடுப்பு

கோடி வணக்கஞ் சொல்வோன்
குரலினிக் காட்டாதே

அமைதி

தோட்டத்து முல்லையின்மேல் நாட்டமோ செல்லவில்லை.
தூய தமிழ் பாட வாயும் இசையவில்லை.
ஈட்டும் பொருள் வேறென்ன நானன்றி இருக்குமோ?
என்னுயிர் அவரின்றேல் ஒருநொடி தறிக்குமோ?

குன்று மலைவழியில் கொடிகொம்பைப் பாராரோ ?
குறுந்தாள் வரகுக் கொல்லை கிளிக்கூச்சல் கேளாரோ ?
சென்ற திசையில் இணை ஒன்றைப் பிரிந்து கத்தும்
செங்கண் கருடன் கண்டே இங்கவர் மீளாரோ ?


30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/32&oldid=1318770" இலிருந்து மீள்விக்கப்பட்டது