பக்கம்:தொடுவானம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர்க்க மாட்டாயா ?



தேஷ் ஆதி

துள்ளி யோடும் புள்ளி மானே !
துணையை விட்டுச் செல்லாயா ?-உன்
துணையை விட்டுச் செல்லாயா ?
உள்ளம் வெம்ப உறக்கம் நீங்க
உருக்குலைந்தேன் ; கூறாயா ?நான்
உருக்குலைந்தேன்; கூறாயா ?

அருவி யாடிக் குன்றம் பாடி
அணைப்பில் வாழ்ந்த நானோஅன்பன்
அணைப்பில் வாழ்ந்த நானோ -
இருண்ட வானம் ஆனேன் அந்தோ !
எடுத்துக் கூறமாட்டாயா ?சென்று
எடுத்துக் கூறமாட்டாயா ? -

முல்லை பூக்க வருவேன் என்று
சொல்லிப் போன அன்பன் அன்று
சொல்லிப் போன அன்பன்
கல்லுடைக்கும் மார்பை எண்ணிக்
கலங்குவதைக் கூறாயா ?நான்
கலங்குவதைக் கூறாயா ?

பிரியும் என்னுயிர் நிலைத்திருக்கப்
பேச்சைக் கேட்க வேண்டும் அன்பன்
பேச்சைக் கேட்க வேண்டும்
விரைவில் சென்று பிரிந்ததோளை
மீட்டுச் சேர்க்க மாட்டாயா ? நீ
மீட்டுச் சேர்க்க மாட்டாயா ?


29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/31&oldid=1318729" இலிருந்து மீள்விக்கப்பட்டது