பக்கம்:தொடுவானம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தித்துப் பார்த்தாயா ?


காப்பி ஆதி

எடுப்பு

செந்தமிழ் நாடு உன்றாய் நாடு
சிந்தித்துப் பார்த்தாயா?தமிழா !

மேல் எடுப்பு

வந்தவர் ஆள வணங்கிக் கொடுத்தாய்;
வஞ்சகர் நற்பயன் துய்க்க விடுத்தாய்;
நொந்தனை; தமிழன் பெயரைக் கெடுத்தாய்;
நுழைபுல மற்றனை; பிறநூல் எடுத்தாய்.

அமைதி

மலையும் வயலும் புனலும் நிறைந்த
மறத்தமிழ் நாட்டினிலே மக்கள்
இலையே பசிஇங் கிலையே அந்தோ
எனுமொலி கேட்குதடா எங்கும்;

கொலைவாள் எடுஉன் மலைத்தோள் குலுக்கு
கொடுமைகள் சாய்ந்திடுமே நாட்டில்;
தலையாம் இப்பணி தாய்நாடுனதே
தயங்காதே தமிழா சற்றும்.


35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/37&oldid=1320318" இலிருந்து மீள்விக்கப்பட்டது