பக்கம்:தொடுவானம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிராக நினை மகனே !


சூலினி திரிபுடை

எடுப்பு

உயிராக நினை மகனே!-திராவிடத்தை

உயிராக நினை மகனே!

மேல் எடுப்பு


அயராமல் உழைத்து நீ அறிவைப் பெருக்கி நாளும்

அமைதி


வற்றாத ஆறுகள் மலைபடு செல்வங்கள்

பெற்றிருந்தும் நீயேன் நிற்கிறாய் கையேந்தி

கொற்கையை அறியாயோ கோலேந்தத் தெரியாயோ

எதற்குத் தயங்குகின்றாய் எழுந்திரு சிறுத்தையே !

காடும் வயலும் உனைக்கை யேந்தி அழைக்குதே

கைகட்டி வடவரின் கால்பார்த்து நிற்பதேர்

நாடோ உனதுசொத்து நரிக்கென்ன அரசாட்சி!

நலமார் திராவிடத்தை வளமாக்கி வாழலாம்!!

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/36&oldid=1342597" இலிருந்து மீள்விக்கப்பட்டது