பக்கம்:தொடுவானம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டுப் பெண்கள்


சிந்து பைரவி ஆதி

எடுப்பு

கார்கண்டு ஆடும் தோகை மயில் என்றன்
கன்னித் தமிழ்நாட்டுப் பெண்கள் இன்பக்
கன்னித் தமிழ்நாட்டுப் பெண்கள்.

மேல் எடுப்பு

ஆரியம் சூழ்ந்ததால் அறிவிழந்தார் ஆண்கள்
அடிமைக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தார்.

அமைதி

வீரம் வளர்த்தவர் வெற்றி கொடுத்தவர்
வேல் விழியார் தமிழ்ப் பெண்கள் நெஞ்சில்
ஈரம் வளர்த்தவர் இன்பங் கொடுத்தவர்
ஏந்திழை யார்தமிழ்ப் பெண்கள் நம்
தீந்தமிழ் நாட்டிற்கோ கண்கள்.


39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/41&oldid=1322069" இலிருந்து மீள்விக்கப்பட்டது