இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கண்ணென்ன கண்ணோ?
செளராஷ்ட்ரம் ஜம்பை
எடுப்பு
கண்ணென்ன கண்ணோ ? — வட்டுக்
கந்தலிடை கட்டிக் கையேந்து வாரைக் காணாத—
மேல் எடுப்பு
பண்ணென்ன பண்ணோ ? — தமிழ்ப்
பண்பைப் பெருக்கி வீரம் வளர்க்காத
பண்ணென்ன பண்ணோ ?
அமைதி
கலையென்ன கலையோ ? நாட்டைக்
கறுக்கும் கொடுமையை அறுக்கும் வாளாக்காத
கலையென்ன கலையோ ?
நிலையென்ன நிலையோ ? மக்கள்
நிலையினைத் தலையான நிலையாக நிணைக்காத
நிலை என்ன நிலையோ ?
56