பக்கம்:தொடுவானம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணென்ன கண்ணோ?


செளராஷ்ட்ரம் ஜம்பை

எடுப்பு

கண்ணென்ன கண்ணோ ? வட்டுக்
கந்தலிடை கட்டிக் கையேந்து வாரைக் காணாத

மேல் எடுப்பு

பண்ணென்ன பண்ணோ ? தமிழ்ப்
பண்பைப் பெருக்கி வீரம் வளர்க்காத
பண்ணென்ன பண்ணோ ?

அமைதி

கலையென்ன கலையோ ? நாட்டைக்
கறுக்கும் கொடுமையை அறுக்கும் வாளாக்காத
கலையென்ன கலையோ ?
நிலையென்ன நிலையோ ? மக்கள்
நிலையினைத் தலையான நிலையாக நிணைக்காத
நிலை என்ன நிலையோ ?


56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/58&oldid=1342096" இலிருந்து மீள்விக்கப்பட்டது