பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅட்டபுயகரத்து எம்மான் 39

என்பதை அறிகின்றோம். அவதாரத்துக் கண்ணனும் அர்ச்சாவதார மூர்த்தியும் ஒரே பரம்பொருள் என்று விசிட்டாத்வைத பேருண்மையையும் உணர்கின்றோம்.

இந்தத் திருக்கோயிலை நிறுவியவன் வயிரமேகன்’ என்ற சிறப்புப் பெயர் பெற்ற தொண்டைமான் சக்கரவர்த்தி. ‘'மன்னவன் தொண்டையர்கோன் வணங்கும் நீண்முடிமாலை வயிரமேகன். தன்வலிதன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி’ என்ற பாசுரப் பகுதியினால் இதனை ஒருவாறு அறியலாம். இந்த வரலாற்றுக் குறிப்பினை நினைந்த வண்ணம் அமைதியான மன நிலையில் திருக்கோயிலைவிட்டு நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.


&

24. பெரி. திரு. 2.8:10,