பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 |டன் வருணனாகிய தெய்வமும் திணை நிலைக் கருப் பொருளாம் என்பர். வன்புலப் பொதுப்பொருள் வன்புலமாவது முல்லை குறிஞ்சி பாலையாகும். இவற்றின் பொதுப்பொருள் ஆர், புன்குஅரசு கிளிஞ்சில் காளா பருத்தி கரும்பு முதலாயின. மென்புலப் பொதுப்பொருள் மென்புலம் என்பன மருதமும் நெய்தலும் இவற்றின் பொதுப்பொருள் கீரை வழுதளை, கிடை சணப்பு வ்ேரி தனக்கு மருதம் முதலியன. பெருமை பொதுப்பொருள் தாளி பூவல் நாவல் கழஞ்சு வேலியு மானும் பதடியும் கோளாயும் குரையும் சுரையும் அரும்பும் வண்டும் அவரையும் அத்தியும் ஐம்பெரு முத்திரையும் என்னும் இவை பெருமை பொதுப்பொருளாம். கருத்துப் பொருள் ஒரு திணைக்குரியன ஒரு திணைச் சேரின் விரிநூற் புலவர் விருந்தென மொழிவர். பதினாறாவது குறிப்பு அகப்பாடல்களில் வந்துள்ள குறிப்பு என்பது, ஆடவராயினும் மகளிராயினும் வேட்கை உள்ளத்தே நிற்ப, அதை முதலாகக் கொண்டு, தாம் நிகழ்த்தும் செய்தியாகும், அச்செய்தி பலவாகும். பதினேழாவது மெய்ப்பாடு அகப்பாடலில் வந்துள்ள மெய்ப்பாடு எது என்று ஆராய்ந்து கூறுதல் வேண்டும். மெய்ப்பாடு என்பது உள்ளத்தில் உள்ள குறிப்பு மெய்க்கண்பட்டு விளங்கிய தோற்றமுடையது மெய்ப்பாடு என்பர். மெய் என்றால் பொருள் நகை முதலான பொருள் தோன்றுவது மெய்ப் பாடாகும் என்பர் பேராசிரியர் (மெய்ப்பாடு - பொருட்பாடு) 22