பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் வெளிவருவதற்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி நல்கியுள்ளது. இதனை நன்றியுடன் பாராட்டுகின்றேன். இந்நூல் நன்முறையில் வெளிவருவதற்கு என்னுடைய தமிழ் மொழித்துறைப் பேராசிரியரும் பதிப்புத்துறையில் நூல்களைப் பதிப்பிப்பதில் வல்லுநராகத் திகழ்பவருமான டாக்டர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் பெரிதும் உதவினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் சொந்த வெளியீடாக வெளிவரும் நூலின் விற்பனை உரிமையை ஏற்றுள்ள பாரி நிலையத்தாருக்கு என் நன்றி. - சென்னை-19 3. 5.95 சி. பாலசுப்பிரமணியன்