பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羲了轻 தொல்காப்பிaம் முதனூலாகிய சூத்திரத்தானும், இதனானே உரையின்றிக் சூத்திரைே நூலெனப்படுவதுTஉ மாயிற்று:முடிந்த நூலானும்அதன் முதனூலானும்; மூடிந்த நூலென்பது இணை நூலென் வாரும் உளர். இணைவன கூறத் தான் கூறானாயின் அது குன்றக் கூறலென மறுக்க. அங்ங்ணங் கொள்ளும் பொருண்மை புன் வாயின் அவை, சூத்திரத் துட்பொரு ளன்றியும்’ என்பதனான் அடங்கும். மற்று, முதனுாலாற் கூறிய பொருள் சில குன்றக்கூறி னான் போல முடிந்த நூலாற் கொள்க. என்றதென்னையெனின் அந்தன்று; இப்பொருண்மை முடிந்த நூலினும் உண்டென்று எடுத்துக் காட்டப்படுமென்றா னென்பது; இது, மேல்; ஏது. நடையினு மெடுத்துக் காட்டினும் (தொல்-மர:102) என்றவழிப் பெறுதுமாயினும் முதனூலல்லது எடுத்துக்காட்டப் பெறாஅரென்றற்கு ஈண்டு வரைந்து கூறினானென்பது; எனவே, ற ற்றகு *.*. ந்து இணை நூலும் அவற்று வழிநூலும் எடுத்துக் காட்டுங்கால் தனக்கு முதல்வராயினாரை நாட்டி அவர் கருத்தே பற்றிப் பிறர் செய்தாரெனினல்லது பிறர்மேல் தலைமைநிறீஇ அவர் கருத்துப் பற்றி இவர் செய்தாரெனக் கூறார். அங்ங்னங் கூறின் அவர் நூற்கே உரையெழுதுவா னல்லனோவென மறுக்க. இனி, 'வினையி னிங்கி விளங்கிய வறிவின் முனைவ’’ - (தொல்-மர ; 94 னாற் செய்யப்பட்ட முதனுாற்காயின் முடிந்த நூல் எடுத்துக் காட்டுத லென்னும் இவ்விலக்கண மின்றென்பது கொள்க; ஒரு தலையன்மையென்னும் உத்திவகைபற்றி யென்பது. ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீங்கி-ஐயவுணர்வும் பொய்யுணர்வுஞ் செம்பொருளினான் நீக்கி; தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளிஇ-அச்செம்பொருள் கருவியாகக் கேட்பான் உணர்வு மருட்கை நீக்கி மெய்யுணர்ந்து தெற்றென வும் இரட்டுறுதனிக்கி ஒற்றுமை கொளுத்தியும்; துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்-கவர்படச் சொல்லாது ஒருபொருள் துணிந்துரைத்து மாறுதலும் அதிகாரத்தான் நின்ற உரையிலக் கணம் (எ-று).