பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

πή ίύ. தொல்காப்பியம் - பொருளதிகாரக்

'ஞாலம் வறந்தீர" என்னும், மருதக்கலியுள்,

அடக்கமில் போழ்தின் கண் தந்தைகள் முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான் ’ என வும் ,

வழிமுறை தாயுழைப் புக்கான் ’’ எனவும் ,

'தலைக் கொண்டு நம்மொடு காயுமற் றிஃதோர்'

புலத்தகைப் புத்தேளிற் புக்கான்' (கலித். 82) என்வும்,

கூறுதலிற் புதல்வனை யீன்றாள் மூன்றாங் காமக்கிழத்தி யாயின எாறும் இவன்மாட்டுத் தாயர்கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப்பர்த்தை யுள்ளிக் கூற்றுநிகழ்ந்தவாறுங் கண்டுகொள்க, பிறவும் அன்ன. தோழி கூற்றும் இவட்கும் ஒக்கும். ())

நச்சினார்க்கினியம் : இது, காமக்கிழத்தியர் கூற்றெல்லாந் தொகுத்துக் கூறுகின்றது; காமக்கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக்கிழமைபூண்டு இல்லறநிகழ்த்தும் பரத்தையர் அவர் பலராதலிற் பன்மையாற் கூறினார். அவர் தலைவனது இளமைப்பருவத்திற்கூடி முதிர்ந்தோரும், அவன் தலை நின்றுஒழுகப்படும் இளமைப்பருவத்தோரும், இடைநிலைப் பருவத் தோருங் காமஞ்சாலா இளமையோருமெனப் பல பகுதியராம். இவரைக் கண்ணிய காமக்கிழத்திய ரெனவே கண்ணாத காமக்கிழத் தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடையராகி வருஞ் சேரிப்பரத்தையருங் குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினை வலபாங்கினரும் பிறருமாம், இனிக் காமக்கிழத்தியரைப், பார்ப் பார்க்குப் பார்ப்பணியை யொழிந்த மூவரும், ஏனையோர்க்குத் தங்குலத்தரல்லாதோரும், வரைந்து கொள்ளும் பரத்தையரு மென்று பொருளுரைப்பாரும் உளர். அவர் அறியார்; என்னை? சிறப்புடைத் தலைவியரொடு பரத்தையரையுங் கூட்டிக் காமக் கிழத்தியரென்று ஆசிரியர் சூத்திரஞ் செய்யின் மயங்கக்கூறலென் னுங் குற்றந் தங்குமாதலின்ன். அன்றியுஞ் சான்றோர் பலருங்

1. காமக்கிழத்தியராவார் பின் முறை வதுவையாகத் தலைவனால் மணந்து கொள்ளப்பட்டவர்கள் எனவும், அவர்கள் தலைவனொடு ஒத்தார், இழிந்தார்

வரையப்பட்டா என மூவண்கப்ப்டுவர் எனவும், இழிந்தராவார் அக்தணர்க்கு