பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா உள 的”、

நச்சினார்க்கினியம் : இது, கூத்தர்க்குரிய கிளவி கூறுகின்றது .

(இ- ள் தொல்லவை உரைத்தலும் . முன்பே மிக்கார் இருவர் இன்பம் நுகர்ந்தவாறு இதுவெனக் கூறலும்; நுகர்ச்சி ஏற்றலும் - நு மது நுகர்ச்சி அவரினுஞ் சிறந்ததெனக் கூறலும்; பல் ஆற்றானும் ஊடலில் தனித்தலும் - இல்லறக் கிழமைக்கு இயல்பன்றென்றாயினுங் இஃது அன் பின்மையா மென்றாயினுங் கூறித் தலைவியை ஊடலினின்று மீட்டலும்; உறுதிகாட்டலும் . இல்வாழ்க்கை நிகழ்த்தி இன்பநுகர்தலே நினக்குப் பொரு ளென்றலும்; -

இனிக் கூறுவன தலைவற்குரிய அறிவு மெய் நிறுத்தலும். புறத்தொழுக்கம் மிக்க தலைவற்கு நீ கற்றறிந்த அறிவு இனி மெய்யாக வேண்டுமென்று அவனை மெய்யறிவின் கண்ணே நிறுத் தலும்; ஏதுவின் உணர்த்தலும் . இக் கழிகாமத்தான் இழிவு தலைவருமென்றதற்குக் காரணங் கூறலும்; துணிவு காட்டலும்அதற்கேற்பக் கழிகாமத்தாற் கெட்டாரை எடுத்துக்காட்டலும்: அணிநிலை உரைத்தலும் முலையினுந் தோளினும் முகத்தினும் எழுதுங்காற் புணர்ச்சிதோறும் அழித்தெழுதுமாறு இதுவெனக் கூறலும்; கூத்தர் மேன இவ்வெட்டுங் கூத்தரிடத்தன (எ-று.)

கூத்தர், நாடகசாலையர் தொன் றுபட்ட நன்றுந் தீதுங் கற்றறிந்தவற்றை அவைக்கெல்லாம் அறியக்காட்டுதற்கு உரிய ரா.கலிற் கூத்தர் இவையும் கூறுபவென்றார். இலக்கியம் இக் காலத்திறந்தன.

பொருட்பொருளார் புன்னலத் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர்” (குறள் 914}.

இஃது அறிவுமெய்ந்நிறுத்தது (2-്)

ஆய்வுரை : இது, கூத்தர்க் குரிய திறம் கூறுகின்றது, (இ-ள் நாட்டில் நிகழ்ந்த தொன்மை வரலாறுகளை

1. கூத்தர்க்குரிய இக்கிளவிகள் யாவும் தலைவியைகோக்கிக் கூறுதற்குரிய லாகக் கொண்டார் இளம்பூரணர். இவற்றுள், தொல்லவையுரைத்தல், நுகர்ச்சி யேற்றல், பல்லாற்றானும் ஊடலில் தணித்தல் ஆகிய மூன்றும் தலை விக்குக் கூறுவன எனவும், உறுதிகாட்டல், அறிவுமெய்க்கிறுத்தல், ஏதுவின் உணர்த்தல் துணிவுகாட்டல், அணி கிலையுரைத்தல் என வரும் ஐந்தும் தலைவற்குக்கூறுவன எனவும் பகுத்துரைப்பக் கச்சினார்க்கினியர்.