பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅே தொல்காப்பியம் - பொருளதிகாரம்

கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை யரி முன்கை யனைத்தோளாய் அடியுறை யருளாமை ஒத்ததோ நினக்கென்ன தரந்த நா நிருங்கூந்தல் எஞ்சாது தனிபற்றிப் பொலம் புனை மகரவாய் துங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறை சுற்றி மோக்கலு மோத்தனன் தறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப பறாஅக் குருகின் உயிர்த்தலு முயிர்த்தனன் தொய்யி லிளமுலை இனிய தைவந்து தொய்யலம் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்’’

அதனால்,

"அல்லல் களைந்தணன் தோழி நந்நகர் அருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னொடு சூழ்வல் தோழி தயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா உலகத்து மன்னுவது புரைமே” (கலி. 54)

எனக் கைப்பட்டுக் கலங்கிப் புணர்ச்சி நிகழ்ந்தமை கூறி அருங்கடி நீவாமை கூறின் நன் றெனத் தமர்க்குக் கூறுமாறு தோழிக்குத் தலவி கூறினாள். சுரிதகத்து இருகாற் றோழி யென்றாள் நாணுத் தளையாக மநைகரந்தவாறு தீரத் தோழிக்கு முகமனாக.

எரியகைத் தன்ன செந்தலை யன்றில்

'பிரியின் வாழா தென்மோ தெய்ய துறைமேய் வலம் புரி துணைசெத் தோடிக் கருங்கால் வெண்குருகு பயிறரும் . பெருங்கடற் படிப்பையெஞ் சிறு நல் லூரே'

இஃது, அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென்றது.