色、 தொல்காப்பியம் - பொருளதிகாரம்
தோழியை வினாதலும் என்பது-இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும் என்றவாறு. எனவே களவலராதல். முதற் கனவினரற்ற லீறாக ஒதிய வொன்பது கிளவியும் தோழியை வினாதற்பகுதி. அவை நிகழாதவழி வினாதலில்லை. அதனால் தோழியை வினாத
லென ஒரு கில வியாக எண்ணற்க.
தெய்வம் வாழ்த்தலும் என்பது - இவ்வாறு பட்டதெனத் தோழி யுரைத்தவழி யிதனை நற்றாய்க்கும் தந்தைக்கும் கூறலாற்றா தாள் தெய்வத்தை வேண்டிக்கோடல்.
போக்குடன் அறிந்தபின்..நிற்றற் கண் ணு ம் என்பது - தலைவனுடன் போயினாள் என்று அறிந்தவழித் தானுந் தோழியோடு கெழுமி இல்லத்தின் க னிறுத்தற் கண்ணும் என்றவாறு.
'பறை படப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தrலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய் கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே.' (குறுந் 13)
பிரிவி னெச்சத்து மகனெஞ்சு வலிப்பினும் என்பது - தலைவன் வரையாது பிரிந்த வழி யொழிந்த தலைமகள் அலராகுதலு மின்றி வேறுபாடுமின்றி ஒருமனைப்பட்டிருந்த வுள் ளக்கருத்தை யறிந்த வழியும் என்றவாறு. வலித்தல் என்பது தெளிதல்.
இருபாற் குடிப்பொரு ளியல்பின்கண்ணும் என்பது - தலைவன்
குடிமை தன் குடிமையோ டொக்குமென வாராய்தற்கண்ணும் என்றவாறு,
குடியென்னாது பொருள் என்றதனால் பொருளுங் குணமும் ஆயப்பெறு மென்றவாறு.
அன்னவை பிறவும் என்றதனான்,
நர் ம்றம் பெற்று நிலைப்புக் காண்டல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்துயில் மறுத்தல் கோலஞ்செய் யாமை”