பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்று அப்பிரிவுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. கல்வியின் பொருட்டும், காடு காத்தற்பொருட்டும், இரண்டு அரசர்கள் தம்முள் மாறுகொண்டு பொரும் போழுது அவர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டும், அரசன் கட்டளைப்படி ஏதாவது ஒரு சிமித்தத்தின் பொருட்டும், பொருள் தேடுதற்பொருட்டும், பரத்தை காரண மாகவும் பிரியும்போது தலைவன் தலைவியை உடன் கூட்டிக் கொண்டு செல்லான், அவ்வாறு சென்றதாகச் சான்றோர்களின் இலக்கியங்களும் இல்லை. தொல்காப்பியர் இக்குறிப்பை, முக்ர்ே வழக்கம் மகடூஉ வோடு இல்லை." என்ற நூற்பாவில் புலப்படுத்துவர். முக்ர்ே வழக்கம் என்பதற்கு இளம்பூரணர், கப்பல் வழியாகக் கடலில் செல்லும் பிரிவு' என்று உரை கூறுவர். முந்ச்ே என்பது கடல். ஆனால், கச்சினார்க்கினி பத், முக்ர்ே வழக்கம்" என்பதற்கு, ஒதல், தூது, பொருள் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் பிரிவு” என்று பொருள் கூறுவர். இளம்பூரணர் கருத்துப்படி கடல் வழியாக மகளிசைக் கூட்டிச் செல்லும் வழக்கம் இல்லாவிடினும், தரை வழியாகச் செல்லும் பிரிவில் தலைவியைக் கூட்டிச்செல்லும் வழக்கம் உண்டு என்று அருத்தாபத்தியால் பெறப்படுகின்றது. ஆனால் நச்சினார்க்கினியர், கூறுவது போல, தலைவியை உடன்கூட்டிச் செல்லும் புலனெறி வழக்காகச் சான்றோர் செய்யுள்களை இயற்றவில்லையாதலின், இவ்வழக்கம் தமிழர்களிடையே என்றும் இருந்ததில்லை என்று கருத வேண்டியுள்ளது. இன்றும் செட்டி காடு போன்ற பகுதிகளில் வாழும் தனவணிகரும் அவரைச் சார்ந் த பிறரும் மலேயா போன்ற பகுதிகளில் வாழும் கனவணிகரும் அவரைச் சார்ந்த பிறரும் மலேயா போன்ற பிற காடுகளுக்குச் செல்லும் பொழுது உரிமை மகளிசைக் கூட்டிச் செல்வதில்லை.” ஒதற்பிரிவு கல்வியின் பொருட்டுத் தலைவன் பிரிவான் என்ப தனால், தலைவன் இதுகாறும் கல்வி கற்றின்ை என்று கருத வேண்டியதில்லை. இதற்கு முன்பே அவன் நல்லாசிரியனை படைத்து அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய கான்கு குறிக்கோள் பொருள்களை உணர்த்தும் நூல்களையெல்லாம் முறைப்படி கந்துத் துறை போகியவன். எவ்வளவுதான் கற்றாலும் கல்வி கரையில அல்லவா : கற்றது கைம்மண் அளவு, கல்லாதது 2. அகத்திணை - நூற்பா 37. 3. இவ்வழக்கம் சிறிது சிறிதாக மாறத் தொடங்குகின்றது. ஒருசிலர் இன்று கூட்டிச் செல்கின்றனர். -