பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔8毒、 ந.அவ. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. (இ-ள) பரவு, பழிச்சு என்னும் உரிச்சொற்கள் இரண்டும் வழுத்துதலாகிய குறிப்புணர்த்தும். எ-று. (உ-ம்) நெல்லுகுத்துப் பரவுங் கடவுளுமிலமே? எனவும், கைதொழுஉப்பழிச்சி? எனவும் வழுத்துதலாகிய குறிப் புணர்த்தின. நடஅங். கடியென் கிளவி, வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே யச்ச முன்றேற் ருயி ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. (இ-ள்) கடியென்னும் உரிச்சொல் வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், முன்தேற்று ஆகிய பத்துக்குறிப்பும் தன்கண் புலப்படத் தோன்றும் பொருண்மையினே யுடையதாகும். எ-று. முன்தேற்று என்பது, புறத்தின்கண் அன்றித் தெய்வ முதலாயினவற்றின் முன்னிலேயில் றின்று தெளிவித்தல் ஆகும் , (உ-ம்) கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு என வரை வும், கடிதுணேப்பகழி’ எனக் கூர்மையும், கடிகா எனக் காப்பும், "கடிமலர்’ எனப்புதுமையும், கடுமான் ? என விரை வும், கடும்பகல் என விளக்கமும், கடுங்கால் ஒற்றலின்? என மிகுதியும், கடுநட்பு எனச்சிறப்பும், கடியையால் நெடுந்தகை செருவத்தானே? என அச்சமும், கொடுஞ் சுழிப் புகார்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே? என முன்தேற்றும் பற்றிக் கடி என்னும் உரிச் சொல் வந்தவாறு காண்க. உஅச. ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே. (இ-ஸ்) கடி என்னுஞ்சொல் மேற்குறித்த பொருளே யன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்பும் கரிப்பாகிய பண்பும் உணர்த்துதற்கும் உரியதாம். எ-று.